செய்திகள்

கும்பகோணம் அருகே பெண்ணிடம் பணம் பறித்த கொள்ளையன் கைது

Published On 2017-01-21 09:44 GMT   |   Update On 2017-01-21 09:44 GMT
கும்பகோணம் அருகே பெண்ணிடம் பணம் பறித்த கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். இவர் மீது போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாமிமலை:

கும்பகோணம் அருகே உள்ள செம்கோடை அரசலாறு வழிநடப்பு பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் மனைவி யமுனா(வயது 30). இவர் இரவு 7 மணி அளவில் தனியாக நடந்து சென்ற போது போது எலுமிச்சங்கா பாளையம் திருவள்ளுவர் நகரை சேர்ந்த தங்கையா மகன் மோகன் யமுனாவை கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.500-ஜ பறித்துள்ளார்.

இது பற்றிய புகாரின் பேரில் கும்பகோணம் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து மோகனை கைது செய்தனர். இவர் மீது போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News