செய்திகள்
சட்டசபையில் ஜல்லிக்கட்டுக்கு புதிய சட்டம் கொண்டு வர வேண்டும்: வக்கீல் சே. பசும்பொன் பாண்டியன் அறிக்கை
சட்டசபையில் ஜல்லிக்கட்டுக்கு புதிய சட்டம் கொண்டு வர வேண்டும் என்று மதுரை வக்கீல் சே. பசும்பொன் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
மதுரை:
மதுரை வக்கீல் சே. பசும்பொன் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழின மாணவர்கள் தன்னெழுச்சி போராட்டத்தின் அழுத்தத்தினால் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அவரச சட்டம் கொண்டு வருவதை விட மத்திய அரசு மசோதா நிறைவேற்றி சட்ட திருத்தம் கொண்டு வருவதன் மூலம் மட்டுமே நிரந்தர தீர்வை எட்ட முடியும்.
சட்டம் பிறப்பிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இருப்பினும் அவசர சட்டம் பிறப்பிப்பதை விட உடனடியாக சட்டசபையை கூட்டி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக புதிய சட்டத்தை இயற்றி ஜனாதிபதியின் ஒப்புதல் பெறலாம்.
சட்டசபையை கூட்டி புதிய சட்டம் இயற்றுவதே சட்டப்பூர்வமான தீர்வாகும் என்று கூறிஉள்ளார்.