செய்திகள்
வேம்படிதாளத்தில் கணவன் - மனைவி தற்கொலை
வேம்படிதாளத்தில் கணவன்-மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் கடன் தொல்லை காரணமாக இருவரும் தற்கொலை செய்துகொண்ட தகவல்கள் போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கொண்டலாம்பட்டி:
சேலத்தை அடுத்த இளம்பிள்ளை அருகே உள்ள வேம்படிதாளம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 36).இவரது மனைவி கவுரி என்ற கவுசல்யா (30). இவர்களுக்கு தனுஸ்ரீ (5), பூர்ணிகா (3) என்ற 2 மகள்கள் உள்ளனர்.
கணவன்-மனைவி இருவரும் நெசவு தொழில் செய்தனர். நேற்று இரவு வீட்டில் 4 பேரும் தூங்கினார்கள். இன்று காலை குழந்தைகள் அழும் சத்தம் கேட்டது. அக்கம் பக்கத்தில் உள்ள பொது மக்கள் ஓடி வந்து கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
அப்போது கணவன்- மனைவி இருவரும் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டு இருந்தனர். இது குறித்து அறிந்த வேம்படி தாளம் கிராம நிர்வாக அதிகாரி செல்வம் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விட்டு இது குறித்து கொண்டலாம்பட்டி போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
போலீசார் சென்று விசாரணை நடத்தினார்கள். முதற்கட்ட விசாரணையில் கடன் தொல்லை காரணமாக கணவன்-மனைவி இருவரும் தற்கொலை செய்தது தெரிய வந்தது.
சேலத்தை அடுத்த இளம்பிள்ளை அருகே உள்ள வேம்படிதாளம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 36).இவரது மனைவி கவுரி என்ற கவுசல்யா (30). இவர்களுக்கு தனுஸ்ரீ (5), பூர்ணிகா (3) என்ற 2 மகள்கள் உள்ளனர்.
கணவன்-மனைவி இருவரும் நெசவு தொழில் செய்தனர். நேற்று இரவு வீட்டில் 4 பேரும் தூங்கினார்கள். இன்று காலை குழந்தைகள் அழும் சத்தம் கேட்டது. அக்கம் பக்கத்தில் உள்ள பொது மக்கள் ஓடி வந்து கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
அப்போது கணவன்- மனைவி இருவரும் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டு இருந்தனர். இது குறித்து அறிந்த வேம்படி தாளம் கிராம நிர்வாக அதிகாரி செல்வம் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விட்டு இது குறித்து கொண்டலாம்பட்டி போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
போலீசார் சென்று விசாரணை நடத்தினார்கள். முதற்கட்ட விசாரணையில் கடன் தொல்லை காரணமாக கணவன்-மனைவி இருவரும் தற்கொலை செய்தது தெரிய வந்தது.