செய்திகள்

தக்கலை அருகே அரசு ஜீப் கண்ணாடி கல்வீசி உடைப்பு

Published On 2017-01-11 12:48 GMT   |   Update On 2017-01-11 12:48 GMT
தக்கலை அருகே போக்குவரத்து அதிகாரிகளிடம் தகராறில் ஈடுபட்ட வேன் டிரைவர் மற்றும் கிளீனர் அரசு ஜீப் கண்ணாடியை கல்லால் உடைத்தனர்.
தக்கலை:

தக்கலை அழகியமண்டபம் சந்திப்பு பகுதியில் நேற்று மாலை போக்கு வரத்து அதிகாரிகள் போக்குவரத்தை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக  வேன் டிரைவர், கிளீனர் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர். அவர்கள்  திடீரென போக்குவரத்து அதிகாரிகளிடம் தகராறில் ஈடுபட்டனர். தகராறு முற்றவே அருகில் இருந்த கல்லால் போக்குவரத்து அதிகாரிகள் வந்த அரசு ஜீப்பை தாக்கி கண்ணாடியை உடைத்தனர்.

இது குறித்து தக்கலை போலீசில் போக்குவரத்து ஊழியர் ஹரிகுமார் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மேரிஜெமிதா விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News