செய்திகள்

மேட்டூர் அணை பகுதியில் 10-ந்தேதி மின்நிறுத்தம்

Published On 2017-01-07 11:17 GMT   |   Update On 2017-01-07 11:17 GMT
மேட்டூர் அணை பகுதியில் 10-ந்தேதி மின்நிறுத்தம் செய்யப்படும் என மின் வாரிய செயற்பொறியாளர் சேகரன் தெரிவித்துள்ளார்.

சேலம்:

சேலம் மேட்டூர் அணை மின் நிலையத்தில் வருகிற 10-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது.

எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மேட்டூர் நகரம், மாதையன் குட்டை, நவப்பட்டி, கோலநாய்க் கன்பட்டி புதூர், கொளத்தூர், பெரியதண்டா, நீதிபுரம், காவேரிபுரம், சின்னதண்டா, கண்ணாமூச்சி, கோவிந்தபாடி, தின்னபட்டி, பாலமலை, அய்யம்புதூர், ஆலமரத்துப்பட்டி, சுப்பிர மணியபுரம், பண்ணவாடி, குரும்பனூர், சவுரியார் பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

இந்த தகவலை மேட்டூர் மின் வாரிய செயற்பொறியாளர் சேகரன் தெரிவித்துள்ளார்.

Similar News