செய்திகள்
கிருஷ்ணகிரி அருகே ஓட்டலில் தகராறு: 2 வாலிபர்கள் கைது
கிருஷ்ணகிரி அருகே ஓட்டலில் நடைபெற்ற தகராறு தொடர்பாக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அருகேயுள்ள பெல்லாரம் பள்ளி பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி(36). இவர் அணையில் இருந்து சோக்காடி செல்லும் சாலையில் ஓட்டல் கடை நடத்தி வருகிறார். கடந்த 1ம் தேதி துடுகனஹள்ளி பகுதியை சேர்ந்த திருப்பதி(25), உத்தேரிக்கொட்டாய் சேர்ந்த தமிழரசன்(29) ஆகியோர் ஒட்டலுக்கு சென்று மீன் வாங்கி சாப்பிட்டுள்ளனர். அதன் பிறகு ஒட்டலில் இருந்து வெளியே வந்த போது உரிமையாளர் பெரியசாமி பணத்தை கேட்டுள்ளார். ஆனால் பணத்தை கொடுக்காமல் சென்றுள்ளனர்.
அதன் பின்னர் நேற்று மீண்டும் கடைக்கு வந்துள்ளனர். அங்கு மீண்டும் பெரியசாமியிடம் தகராறு செய்துள்ளனர். மேலும் அவரை அருகில் இருந்த கத்தியை எடுத்து வயிற்று பகுதியில் குத்தியுள்ளனர். இதனை தடுக்க வந்த அப்பாவு என்பவரையும் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த இருவரையும் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து பெரியசாமி அணை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி திருப்பதி மற்றும் தமிழரசன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி அருகேயுள்ள பெல்லாரம் பள்ளி பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி(36). இவர் அணையில் இருந்து சோக்காடி செல்லும் சாலையில் ஓட்டல் கடை நடத்தி வருகிறார். கடந்த 1ம் தேதி துடுகனஹள்ளி பகுதியை சேர்ந்த திருப்பதி(25), உத்தேரிக்கொட்டாய் சேர்ந்த தமிழரசன்(29) ஆகியோர் ஒட்டலுக்கு சென்று மீன் வாங்கி சாப்பிட்டுள்ளனர். அதன் பிறகு ஒட்டலில் இருந்து வெளியே வந்த போது உரிமையாளர் பெரியசாமி பணத்தை கேட்டுள்ளார். ஆனால் பணத்தை கொடுக்காமல் சென்றுள்ளனர்.
அதன் பின்னர் நேற்று மீண்டும் கடைக்கு வந்துள்ளனர். அங்கு மீண்டும் பெரியசாமியிடம் தகராறு செய்துள்ளனர். மேலும் அவரை அருகில் இருந்த கத்தியை எடுத்து வயிற்று பகுதியில் குத்தியுள்ளனர். இதனை தடுக்க வந்த அப்பாவு என்பவரையும் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த இருவரையும் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து பெரியசாமி அணை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி திருப்பதி மற்றும் தமிழரசன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.