செய்திகள்

சேலத்தில் 2-ம் திருமணம் செய்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை முயற்சி

Published On 2017-01-02 04:16 GMT   |   Update On 2017-01-02 04:16 GMT
சேலத்தில் 2-ம் திருமணம் செய்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து சேலம் கிச்சிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
சேலம்:

சேலம் கிச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ்(வயது 35). தச்சு தொழிலாளி. இவர் சுமதி (வயது 32) என்ற பெண்ணை கடந்த 2 வருடத்திற்கு முன் திருமணம் செய்து கொண்டார்.

சுமதி ஏற்கனவே திருமணம் ஆனவர். அவரது கணவர் இறந்து விட்டதால் சுமதி, ரமேசை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது.

சுமதிக்கு அடிக்கடி வயிற்று வலி வரும். இதற்கு அவர் சிகிச்சை எடுத்தும் குணமாகவில்லை. இந்த நிலையில் நேற்று சுமதி வீட்டில் தனியே இருந்தார். அப்போது அவருக்கு வயிற்று வலி வந்தது. இதில் வாழ்க்கை வெறுப்படைந்த சுமதி தன் மீது மண்எண்ணெய் கொட்டி தீவைத்து கொண்டார்.

இதில் உடல் கருகிய சுமதியை அக்கம் பக்கம் இருந்தவர்கள் தூக்கி சென்று சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இங்கு சுமதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து சேலம் கிச்சிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Similar News