செய்திகள்

கும்பகோணத்தில் மாணவர் கொலை வழக்கில் 2 வாலிபர்கள் கைது

Published On 2016-12-31 09:58 GMT   |   Update On 2016-12-31 09:58 GMT
கும்பகோணத்தில் பிளஸ்-1 மாணவர் கொலையில் 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

சுவாமிமலை:

கும்பகோணத்தை அடுத்த தாராசுரம் கூட்டுறவு நகரை சேர்ந்தவர் நிஜாமைதீன். இவரது மகன் அப்துல் மஜித் (16). கும்பகோணத்தில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்வு அப்துல் மஜித் கும்பகோணம் வளையப்பேட்டை பைபாஸ் சாலையில் உள்ள காவிரி ஆறு பாலத்தின் அடியில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

கொலையாளிகளை பிடிக்க கும்பகோணம் டி.எஸ்.பி. சீனிவாச பெருமாள் மேற்பார்வையில் சுவாமி மலை இன்ஸ்பெக்டர் சுகுணா,கும்பகோணம் தாலுகா இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி உள்பட 5 இன்ஸ்பெக்டர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வந்தனர். இந்நிலையில் நேற்றிரவு அப்துல்மஜித் கொலை தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். பிடிபட்ட தாராசுரம் கவுரா தெருவை சேர்ந்த சண்முகசுந்தரம் (வயது 25), அதே பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி (23) ஆகிய 2 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையில் சண்முக் சுந்தரத்தின் காதலியை அப்துல்மஜித் கேலி செய்ததாகவும், அதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் நண்பர் ராமமூர்த்தியுடன் சேர்ந்து மாணவரை கொலை செய்தது போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Similar News