செய்திகள்

அருப்புக்கோட்டையில் கல்லூரிக்கு சென்ற மாணவர் மாயம்

Published On 2016-12-30 07:53 GMT   |   Update On 2016-12-30 07:53 GMT
அருப்புக்கோட்டையில் கல்லூரிக்கு சென்ற மாணவர் மாயமானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

விருதுநகர்:

அருப்புக்கோட்டை சுக்கிலநத்தம்ரோட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் அன்புராஜ் (வயது 22). இவர் விருதுநகரில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.எஸ்.சி. படித்து வந்தார்.

கடந்த 24-ந் தேதி காலையில் வழக்கம்போல் கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்ற அன்புராஜ் பின்னர் வீடு திரும்ப வில்லை.

இதையடுத்து ராஜேந்திரன், தனது மகனை நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தார். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து ராஜேந்திரன் அருப்புக்கோட்டை டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான அன்புராஜை தேடி வருகின்றனர்.

Similar News