செய்திகள்

திருவையாறில் மதுவிற்ற 2 பேர் கைது

Published On 2016-12-26 10:49 GMT   |   Update On 2016-12-26 10:49 GMT
திருவையாறில் மதுவிற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தார்.

திருவையாறு:

திருவையாறு அருகே அம்மாள் கிராமம் வடக்குதெருவை சேர்ந்தவர் கனகராஜ் (55), நல்லிச்சேரி புதுத்தெருவை சேர்ந்த சீனிவாசன் மகன் பிரபாகரன் (28), இருவரும் சம்பவத்தன்று திருவையாறு பொன்னாவரை ரோட்டில் அனுமதியில்லாமல் மதுபாட்டில்களை வைத்துக் கொண்டு விற்பனை செய்து கொண்டிருந்தார்கள்.

இது குறித்து தகவல் அறிந்த திருவையாறு சப்-இன்ஸ்பெக்டர் உமாபதி விரைந்து சென்று இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தார்.

Similar News