செய்திகள்

நன்னிலம் அருகே மதுபாட்டில் கடத்திய 3 பேர் கைது

Published On 2016-12-09 15:12 GMT   |   Update On 2016-12-09 15:12 GMT
நன்னிலம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மதுபாட்டில் கடத்திய 3 பேரை கைது செய்தனர்.
நன்னிலம்:

நன்னிலம் அடுத்துள்ள வாரக்குப்பம் சிமென்ட் பாலம் அருகில் பேரளம் போலீசார் வாகன தணிக்கை சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தஞ்சாவூர் விளார் ரோடு விவேகானந்த தெருவைச்சேர்ந்த குழந்தை ஏசு (வயது 32), அவரது நண்பர் காரைக்கால் சேத்தூர் செல்வம் (33) மற்றும் அதே ஊரைச்சேர்ந்த முனியப்பிள்ளை மகன் முத்துவேல் (20) ஆகிய 3 பேரும் 20 மதுப்பாட்டில்களை மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து மது பாட்டில்களை பறிமுதல் செய்து 3 பேரையும் போலீசார்  கைது செய்தனர்.

Similar News