செய்திகள்

நாகர்கோவிலில் சோனியா காந்தி பிறந்த நாள்விழா: காங்கிரசார் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

Published On 2016-12-09 14:20 GMT   |   Update On 2016-12-09 14:21 GMT
நாகர்கோவிலில் அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியின் பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.
நாகர்கோவில்:

அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியின் பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நாகர்கோவிலில் நகர காங்கிரஸ் அலுவலகத்தில் நகர தலைவர் மாகீன் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்ப்ட்டது. பின்னர் தொண்டர்கள் மற்றும் பொது மக்களுக்கு இனிப்புகளும் வழங்கப்ப்ட்டன.

இந்நிகழ்ச்சியில் வக்கீல் ராதாகிருஷ்ணன், சுந்தர்சிங், ஜெயசிங், ஜாகீர் உசேன், டேவிட், சேம்ராஜ், டொமினிக், ஸ்டார்வின், சாந்தி ரோஸ்லின், லீமா ரோஸ், சரலூர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News