செய்திகள்

தோவாளை பூ மார்க்கெட்டில் மல்லிகை கிலோ ரூ.1100க்கு விற்பனை

Published On 2016-12-09 14:15 GMT   |   Update On 2016-12-09 14:15 GMT
பனி பொழிவு காரணமாக தோவாளை பூ மார்க்கெட்டுக்கு மல்லிகை பூ வரத்து குறைந்து உள்ளது. இதனால் மல்லிகை கிலோ ரூ. 1100க்கு விற்பனையானது.
ஆரல்வாய்மொழி:

தோவாளை பூ மார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து வழக்கம்போல் உள்ளது. அதே சமயம் பனி பொழிவு காரணமாக மல்லிகை பூ வரத்து மட்டும் குறைந்து உள்ளது. இதனால் இன்று மல்லிகை கிலோ ரூ.1100க்கு விற்பனையானது.

நேற்றை விட ரூ.600 விலை குறைந்துள்ளது. பிச்சிப்பூ ரூ.900க்கும்,  சம்பங்கி ரூ.100க்கும், அரளி ரூ.150க்கும் விற்பனையானது. 

மற்ற பூக்களின் விலையும் குறைந்து காணப்பட்டது.

Similar News