செய்திகள்
ஓசூர் அருகே இளம்பெண் தற்கொலை: போலீசார் விசாரணை
ஓசூர் அருகே தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர் :
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பேரிகை பகுதியை சேர்ந்தவர் பாபு. இவரது மகள் மஞ்சுளா (வயது 17).
இவர் சம்பவத்தன்று திடீரென வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அப்போது இதனை கண்டதும் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் விரைந்து சென்று மஞ்சுளாவை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நேற்று மதிய நேரத்தில் அனுமதிக்கப்பட்ட அவர் இரவு 8.45 மணி அளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து பேரிகை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இளம்பெண் மஞ்சுளா சாவுக்கான காரணம் என்ன? என்பது குறித்தும் இதில் யார்? யார்? சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பேரிகை பகுதியை சேர்ந்தவர் பாபு. இவரது மகள் மஞ்சுளா (வயது 17).
இவர் சம்பவத்தன்று திடீரென வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அப்போது இதனை கண்டதும் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் விரைந்து சென்று மஞ்சுளாவை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நேற்று மதிய நேரத்தில் அனுமதிக்கப்பட்ட அவர் இரவு 8.45 மணி அளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து பேரிகை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இளம்பெண் மஞ்சுளா சாவுக்கான காரணம் என்ன? என்பது குறித்தும் இதில் யார்? யார்? சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.