செய்திகள்
‘சோ’ ராமசாமி மறைவு: கவர்னர் இரங்கல்
பத்திரிகை துறை ஒரு அனுபவசாலியையும், பெரிய தனிப்பண்புமிக்க மனிதரையும் இழந்து விட்டதாக ‘சோ’ ராமசாமி மறைவையொட்டி தமிழ்நாடு கவர்னர் வித்யாசாகர்ராவ் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
சென்னை:
‘சோ’ ராமசாமி மறைவையொட்டி தமிழ்நாடு கவர்னர் வித்யாசாகர்ராவ் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
‘சோ’ ராமசாமி மரணம் அடைந்ததை அறிந்து ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்தேன். அவர் ஒரு நடிகராகவும், பத்திரிகை ஆசிரியராகவும், வக்கீலாகவும், எழுத்தாளராகவும திகழ்ந்தார். இவர் பன்முக திறமையுடன் கூடிய ஆளுமை நிறைந்தவர். தைரியமான மூத்த பத்திரிகையாளராகவும், அரசியல் விமர்சகராகவும் இருந்து தனது கருத்துக்களை எப்போதும் தயக்கமின்றி தெளிவாக எடுத்துரைத்தவர்.
பத்திரிகை துறை ஒரு அனுபவசாலியையும், பெரிய தனிப்பண்புமிக்க மனிதரையும் இழந்து விட்டது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அவரது ஆன்மா அமைதி பெறவும் இறைவனை வேண்டுகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
‘சோ’ ராமசாமி மறைவையொட்டி தமிழ்நாடு கவர்னர் வித்யாசாகர்ராவ் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
‘சோ’ ராமசாமி மரணம் அடைந்ததை அறிந்து ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்தேன். அவர் ஒரு நடிகராகவும், பத்திரிகை ஆசிரியராகவும், வக்கீலாகவும், எழுத்தாளராகவும திகழ்ந்தார். இவர் பன்முக திறமையுடன் கூடிய ஆளுமை நிறைந்தவர். தைரியமான மூத்த பத்திரிகையாளராகவும், அரசியல் விமர்சகராகவும் இருந்து தனது கருத்துக்களை எப்போதும் தயக்கமின்றி தெளிவாக எடுத்துரைத்தவர்.
பத்திரிகை துறை ஒரு அனுபவசாலியையும், பெரிய தனிப்பண்புமிக்க மனிதரையும் இழந்து விட்டது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அவரது ஆன்மா அமைதி பெறவும் இறைவனை வேண்டுகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.