செய்திகள்

வெள்ளக்கோவில் அருகே மொபட்-லாரி மோதல்: மாணவன் பலி

Published On 2016-12-05 14:31 GMT   |   Update On 2016-12-05 14:31 GMT
வெள்ளக்கோவில் அருகே மொபட்-லாரி மோதல்; மாணவன் பலி தந்தை படுகாயம்

வெள்ளக்கோவில்:

வெள்ளக்கோவில் அருகே தும்பம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நல்லமுத்து (வயது 50). இவரது மகன் ருத்திரமூர்த்தி (வயது 13). தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் இன்று காலை திருமண நிகழ்ச்சிக்காக நல்ல முத்து தனது மகன் ருத்திர மூர்த்தியுடன் மொபட்டில் சென்றார்.

பின்னர் அங்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது கோவையில் இருந்து கரூர் நோக்கி வெள்ளக்கோவில் கடை வீதியில் சென்ற ஒரு லாரி திடீரென மொபட் மீது மோதியது. இதில் தந்தை- மகன் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

படுகாயம் அடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதில் செல்லும் வழியிலேயே ருத்திரமூர்த்தி பரிதாபமாக இறந்தார்.

காயம் அடைந்த நல்லமுத்து காங்கயம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று பின்னர் மேல்-சிகிச்சைக்காக ஈரோடு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வெள்ளக்கோவில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Similar News