செய்திகள்

சோகத்தில் அமைச்சர்கள்- அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்

Published On 2016-12-05 09:53 GMT   |   Update On 2016-12-05 09:53 GMT
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நலம் பற்றி தகவல் அறிந்ததும் அமைச்சர்கள் மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கவலையுடன் காணப்படுகின்றனர்.
சென்னை:

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நலம் பற்றி தகவல் அறிந்ததும் சென்னையில் இருந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உடனடியாக அப்பல்லோ வந்து விட்டனர்.

வெளி மாவட்டங்களை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் இரவோடு இரவாக புறப்பட்டு சென்னை வந்தனர்.

அவர்கள் அனைவரும் சோகமாக கவலையுடன் காணப்பட்டனர். அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சென்ற அவர்கள் அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசித்தனர்.

காலை 8 மணிக்கு அவரவர் தங்கி இருந்த அறைகளுக்கு சென்று விட்டு மீண்டும் 11 மணி அளவில் அப்பல்லோ வந்தனர்.

ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் தலைமை கழக நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஆஸ்பத்திரியிலேயே முகாமிட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் கவலையுடன் காணப்படுகின்றனர்.

Similar News