செய்திகள்
பாபநாசம் அருகே பஸ் மோதி வாலிபர் பலி
பாபநாசம் அருகே பஸ் மோதி வாலிபர் பலியான சம்பவம் புத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாபநாசம்:
தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள புத்தூர் கீழத்தெருவைச் சேர்ந்த பவுன்ராஜ் மகன் கார்த்திக் (வயது 22) விவசாய கூலித் தொழிலாளி. இவர் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் செப்பியநல்லூர் வீரனார் கோவில் வளைவில் சென்றபோது அந்த வழியாக வந்த அரசு டவுன்பஸ் கார்த்தி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் அரித்துவாரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணமூர்த்தி, அசோக்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பலியான கார்த்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வலங்கைமான் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் புத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள புத்தூர் கீழத்தெருவைச் சேர்ந்த பவுன்ராஜ் மகன் கார்த்திக் (வயது 22) விவசாய கூலித் தொழிலாளி. இவர் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் செப்பியநல்லூர் வீரனார் கோவில் வளைவில் சென்றபோது அந்த வழியாக வந்த அரசு டவுன்பஸ் கார்த்தி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் அரித்துவாரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணமூர்த்தி, அசோக்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பலியான கார்த்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வலங்கைமான் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் புத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.