செய்திகள்

திருத்துறைப்பூண்டி அருகே மின்சாரம் தாக்கி பெண் பலி

Published On 2016-12-03 09:58 GMT   |   Update On 2016-12-03 09:58 GMT
திருத்துறைப்பூண்டி அருகே மின்சாரம் தாக்கி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள எழிலூர் ஊராட்சி நேமம் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் அன்பழகன் (வயது38) விவசாயி. இவர் மனைவி கவிதா (33). இவருக்கு பிரியதர்ஷினி (10), மதுமிதா (7) என்ற இரு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டில் மின் கசிவு ஏற்பட்டு கம்பி வேலியில் மின்சாரம் பாய்ந்துள்ளது.

இதனை அரியாத கவிதா கம்பி வேலியை தொட்டுள்ளார். இதில் மின்சாரம் தாக்கி தூக்கி எறியப்பட்டார். அதனை கண்ட அக்கம்பக்கத்தினர் கவிதாவை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து எழிலூர் கிராம நிர்வாக அலுவலர் கோகிலன், எடையூர் வருவாய் ஆய்வாளர் ஜோதிபாசு உள்ளிட்டோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News