செய்திகள்
பணகுடி அருகே கல்லூரி மாணவி தற்கொலை
பணகுடி அருகே தலை வலியால் அவதிப்பட்டு வந்த கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை:
பணகுடி அருகே உள்ள கலந்தபனையை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகள் அனிதா(வயது19). இவர் அப்பகுதியில் உள்ள கல்லூரியில் பி.ஏ. இறுதியாண்டு படித்து வந்தார். அனிதா தலைவலியால் அவதிப்பட்டு வந்தார். பல இடங்களில் வைத்தியம் பார்த்தும் நோய் குணமாக வில்லை.
இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அனிதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி பணகுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.