செய்திகள்

கிருஷ்ணகிரியில் பைக் திருடிய வாலிபர் கைது

Published On 2016-11-27 12:06 GMT   |   Update On 2016-11-27 12:06 GMT
கிருஷ்ணகிரியில் பைக் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் சின்னவள்ளியப்பன் (46). இவர் கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகேயுள்ள மெட்ரோ பஜாருக்கு வந்துள்ளார்.

தனது பைக் நிறுத்திவிட்டு மளிகைப் பொருட்கள் வாங்க சென்றுள்ளார். பின்னர் மீண்டும் வந்து பார்த்தபோது பைக் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அப்பகுதி முழுவதும் தேடியும் பைக் கிடைக்கவில்லை.

இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் 5 ரோடு ரவுண்டானா பகுதியில் போலீசார் வாகன சோதனையின் செய்தபோது சந்தேகத்திற்கிடமாக பைக்கில் வந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கே.ஏ.தர்கா பகுதியை சேர்ந்த முதஷீர்(21) என்பதும், சின்ன வள்ளியப்பனின் பைக் திருட்டில் ஈடுப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து முதஷீரை கைது செய்தனர்.

Similar News