செய்திகள்

திருவாரூர் அருகே கார் மோதி வாலிபர் பலி

Published On 2016-11-26 11:34 GMT   |   Update On 2016-11-26 11:34 GMT
திருவாரூர் அருகே கார் மோதி வாலிபர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் ஆதனூர் மண்டபம் காலனி தெருவை சேர்ந்தவர் முருகையன். இவரது மகன் மோகன்தாஸ் (வயது 29). இவர் நேற்று இரவு ஆதனூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது நாகையில் இருந்து வந்து கார் மோகன்தாஸ் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன்இன்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டிவந்த நாகை வெளிப்பாளைத்தை சேர்ந்த ரத்தினவேலை கைது செய்தனர்.

Similar News