திருவையாறு அருகே பெண் தீக்குளித்து தற்கொலை
திருவையாறு:
தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே கண்டியூர் காளியம்மன் கோவில் புதுதெருவை சேர்ந்தவர் அன்பழகன்.இவரது மகள் பிரித்திகா (வயது 21). பொறியியல் பட்டதாரி. இவருக்கு நீண்ட நாட்களாக வயிற்றுவலி இருந்துள்ளது. அவர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் அவருக்கு வயிற்றுவலி குணமாகவில்லை. இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார்.
இந்நிலையில் பிரித்திகாவிற்கு நேற்று மீண்டும் வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்து வீட்டில் இருந்த மண்ணெணையை எடுத்து உடலில் ஊற்றி தீவைத்துக்கொண்டார். உடலில் தீபற்றிய நிலையில் வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்த அவரை கண்டு அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
அவரது உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்த அவர்கள் அவரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அவரது தாய் மகேஸ்வரி கொடுத்த புகாரின்பேரில் திருவையாறு இன்ஸ்பெக்டர் சிவராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொறியியல் பட்டதாரி பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.