செய்திகள்
விருதுநகர் அருகே வங்கிக்கு சென்ற இளம்பெண் மாயம்
வங்கிக்கு சென்று வருவதாக கூறி சென்ற இளம்பெண் மாயமாகி விட்டதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர்:
விருதுநகர் கட்டநார் பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகள் நாகஜோதி (வயது19). இவர் கணவர் அருள்ராஜூடன் பட்டாசு கடையில் வேலை பார்த்து வந்தார்.
தீபாவளி பண்டிகைக்கு பிறகு அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு மில்லுக்கு அருள்ராஜ் வேலைக்கு சென்றுவிட்டார். இதனால் நாகஜோதி மட்டும் தனியாக இருந்து வந்தார்.
இந்த நிலையில் ஆர்.ஆர்.நகரில் உள்ள வங்கிக்கு சென்று வருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு நாகஜோதி சென்றுள்ளார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர் பல இடங் களிலும் தேடி பார்த்தனர்.
ஆனால் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து நாகஜோதியின் தாய் பிச்சைக்கனி, வச்சக்காரப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகஜோதியை தேடி வருகின்றனர்.