செய்திகள்

காயல்பட்டினத்தில் வீடு புகுந்து செல்போன் திருடிய 2 வாலிபர்கள் கைது

Published On 2016-11-03 12:00 GMT   |   Update On 2016-11-03 12:00 GMT
காயல்பட்டினத்தில் வீடு புகுந்து செல்போன் திருடிய 2 வாலிபர்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
ஆறுமுகநேரி:

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் நெய்னார் தெருவை சேர்ந்தவர் இப்ராகிம் (வயது 21). டிப்ளமோ படித்துள்ளார். இவர் சம்பவத்தன்று இரவில் கம்ப்யூட்டர் பார்த்துவிட்டு வீட்டின் கதவை பூட்டாமல் தூங்கி விட்டதாக தெரிகிறது. நேற்று அதிகாலையில் இப்ராகிம் எழுந்து பார்த்த போது வீட்டின் மேஜையில் வைத்திருந்த ரூ. 25 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் திருட்டு போயிருந்தது.

உடனே இப்ராகிம் வீட்டின் வெளியே விரைந்து சென்று பார்த்த போது அங்கு 2 நபர்கள் தப்பி ஓட முயன்றனர். இப்ராகிம் அவர்கள் பின்னால் விரைந்து சென்று என்னுடைய வீட்டில் செல்போனை எடுத்தீர்களா? என கேட்டுக்கொண்டிருந்தார்.

இதற்கிடையே இப்ராகிம் உறவினர்கள் சிலரும் அங்கு வந்துள்ளனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாகப் பேசிய அந்த 2 நபர்களையும் பிடித்து ஆறுமுகநேரி போலீசில் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பிடிபட்ட நபர்கள் காயல்பட்டினம் சீதக்காதி நகரை சேர்ந்த முகம்மது அப்துல்காதர் சாகுல் ஹமீது (27), பரிமார் தெருவை சேர்ந்த சேகு நூர்தீன் (23) என்பதும், இவர்கள் இப்ராகிம் வீட்டில் செல்போனை திருடியதும் தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்தனர்.

Similar News