செய்திகள்

குன்னம் அருகே தாய் இறந்த துக்கம் தாங்காமல் மகன் வி‌ஷம் குடித்து தற்கொலை

Published On 2016-11-03 10:29 GMT   |   Update On 2016-11-03 10:29 GMT
குன்னம் அருகே தாய் இழந்த துக்கம் தாக்காமல் மகன் வி‌ஷம் குடித்து தற்கொலை கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குன்னம்:

குன்னம் அருகே உள்ள எழுமூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 55) இவரது மகன் சுகுமார் (19) கூலி வேலை செய்து வந்தார்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சுகுமாரின் தாய் உடல் நிலை குறைவு காரணமாக இறந்து விட்டார். இதனால் மனஅழுத்தத்தில் இருந்த சுகுமார் சரிவர யாரிடமும் பேசாமல் உணவு உட் கொள்ளாமல் இருந்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று சுகுமார் அதே பகுதியில் உள்ள தோட்டத்திற்கு சென்று அங்குள்ள அரளி விதைகளை அரைத்து குடித்துள்ளார். இதில் மயக்கமடைந்து அவர் கீழே விழுந்தார்.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பெரம்பலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து மங்களமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குன்னம் அருகே தாய் இழந்த துக்கம் தாக்காமல் மகன் வி‌ஷம் குடித்து தற்கொலை கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News