செய்திகள்
ஆண்டிப்பட்டி அருகே வீடு புகுந்து பெண்ணை கற்பழிக்க முயன்ற தொழிலாளி கைது
ஆண்டிப்பட்டி அருகே வீடு புகுந்து பெண்ணை கற்பழிக்க முயன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே குமணன்தொழுவை சேர்ந்தவர் தனராஜ். இவரது மனைவி பாண்டியம்மாள் (வயது37). இருவரும் விவசாய தொழிலாளிகள். சம்பவத்தன்று தன்ராஜ் வேலைக்கு சென்று விட்டார். பாண்டியம்மாள் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி வைப்புத்தேவர் (48) என்பவர் நைசாக பாண்டியம்மாளின் வீட்டுக்குள் புகுந்து அவரது கையை பிடித்து இழுத்து தகாத முறையில் நடந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பாண்டியம்மாள் சத்தம்போட்டார்.
சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் திரளவே வைப்புத்தேவர் தப்பி ஓடி விட்டார்.
இது குறித்து மயிலாடும் பாறை போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வைப்புத்தேவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.