செய்திகள்

ராயபுரத்தில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு: வாலிபர் கைது

Published On 2016-10-28 07:06 GMT   |   Update On 2016-10-28 07:07 GMT
ராயபுரத்தில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ராயபுரம்:

ராயபுரம் ரெயில் நிலையத்தில் கட்டுமான பணி நடந்து வருகிறது. இங்கு ராசிபுரத்தை சேர்ந்த கலா (35) தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

நேற்று மாலை பணி முடிந்து அதே பகுதியில் தொழிலாளர்கள் இருந்தனர். அப்போது உடன் வேலை பார்க்கும் தொழிலாளி ரத்னவேல் திடீரென அரிவாளால் கலாவை சரமாரியாக வெட்டினர்.

இதில் அவரது தலை, கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. அலறல் சத்தம் கேட்டு வந்த தொழிலாளர்கள் கலாவை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து ராயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரத்னவேலை கைது செய்தனர்.

அரிவாள் வெட்டில் காயம் அடைந்த கலா கணவரை பிரிந்து வாழ்கிறார். எனவே கள்ளக்காதல் தகராறில் கொலை முயற்சி நடந்ததா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Similar News