செய்திகள்
மலேசியாவில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் 1½ கிலோ தங்கம் கடத்தல்: பயணி கைது
மலேசியாவில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் பயணியிடம் ரூ.50 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி:
திருச்சியில் இருந்து துபாய், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் தினமும் ஏராளமான பயணிகள் திருச்சி விமான நிலையத் திற்கு வருகின்றனர். அவர்கள் அனைவரும் தீவிர சோதனை செய்யப்பட்ட பிறகே வெளியே அனுப்பப்படுகின்றனர்.
இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையம் வழியாக தங்கம் கடத்தி வரும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இருப்பினும் தங்கம் கடத்தி வரும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்றிரவு 11.45 மணிக்கு மலேசியாவில் இருந்து திருச்சிக்கு ஏர் ஏசியா விமானம் வந்தது. அதில் வரும் பயணி, தங்கம் கடத்தி வருவதாக மதுரை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து திருச்சி விமான நிலையத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள், மலேசியா விமானத்தில் வந்த பயணிகளிடம் தீவிர சோதனை மேற்கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியை சேர்ந்த மதுவன்ராஜா என்பவரின் உடைமைகளை சோதனை செய்த போது, அவர் கொண்டு வந்திருந்த டார்ச் லைட்டில் 1 கிலோ 600 கிராம் தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவரை அதிகாரிகள் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட தங்க கட்டிகளின் மதிப்பு ரூ.50 லட்சம் இருக்கும்.
நேற்று முன்தினம் இரவு துபாயில் இருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் இருக்கை அடியில் 695 கிராம் தங்கம் சிக்கியது. அதனை துபாயில் இருந்து திருச்சிக்கு கடத்தி வந்த பயணி அதிகாரிகள் சோதனைக்கு பயந்து, இருக்கையின் அடியில் போட்டு சென்றது தெரிய வந்தது.
இது தொடர்பாக அந்த விமானத்தில் வந்த பயணிகளின் விவரத்தை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்றிரவு மலேசியா விமானத்தில் பயணி ஒருவர் ரூ.50 லட்சம் தங்கம் கடத்தி வந்த சம்பவம் அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியில் இருந்து துபாய், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் தினமும் ஏராளமான பயணிகள் திருச்சி விமான நிலையத் திற்கு வருகின்றனர். அவர்கள் அனைவரும் தீவிர சோதனை செய்யப்பட்ட பிறகே வெளியே அனுப்பப்படுகின்றனர்.
இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையம் வழியாக தங்கம் கடத்தி வரும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இருப்பினும் தங்கம் கடத்தி வரும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்றிரவு 11.45 மணிக்கு மலேசியாவில் இருந்து திருச்சிக்கு ஏர் ஏசியா விமானம் வந்தது. அதில் வரும் பயணி, தங்கம் கடத்தி வருவதாக மதுரை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து திருச்சி விமான நிலையத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள், மலேசியா விமானத்தில் வந்த பயணிகளிடம் தீவிர சோதனை மேற்கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியை சேர்ந்த மதுவன்ராஜா என்பவரின் உடைமைகளை சோதனை செய்த போது, அவர் கொண்டு வந்திருந்த டார்ச் லைட்டில் 1 கிலோ 600 கிராம் தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவரை அதிகாரிகள் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட தங்க கட்டிகளின் மதிப்பு ரூ.50 லட்சம் இருக்கும்.
நேற்று முன்தினம் இரவு துபாயில் இருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் இருக்கை அடியில் 695 கிராம் தங்கம் சிக்கியது. அதனை துபாயில் இருந்து திருச்சிக்கு கடத்தி வந்த பயணி அதிகாரிகள் சோதனைக்கு பயந்து, இருக்கையின் அடியில் போட்டு சென்றது தெரிய வந்தது.
இது தொடர்பாக அந்த விமானத்தில் வந்த பயணிகளின் விவரத்தை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்றிரவு மலேசியா விமானத்தில் பயணி ஒருவர் ரூ.50 லட்சம் தங்கம் கடத்தி வந்த சம்பவம் அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.