செய்திகள்

கூடல்புதூரில் நடந்து சென்ற பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு

Published On 2016-10-23 17:40 GMT   |   Update On 2016-10-23 17:40 GMT
மதுரை கூடல்புதூரில் இன்று காலை நடந்து சென்ற பெண்ணிடம் 7 பவுன் நகையை பறித்த மர்ம வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை:

மதுரை கூடல்புதூர் ஆனந்தன் நகரைச் சேர்ந்த கருப்பசாமி மனைவி செல்வி (வயது44). இவர் இன்று காலை கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம வாலிபர்கள் திடீரென்று செல்வியை வழிமறித்து அவர் அணிந்திருந்த 7 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பி விட்டனர்.

இதுகுறித்து கூடல்புதூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் நகையை பறித்த மர்ம வாலிபர்களை தேடி வருகிறார்கள்.

Similar News