செய்திகள்

கரூர் அருகே கள்ளக்காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2016-10-23 13:57 GMT   |   Update On 2016-10-23 13:57 GMT
கரூர் அருகே ஆளில்லாத தோட்டத்து வீட்டில் இன்று காலை ஒரு வாலிபரும், ஒரு இளம்பெண்ணும் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினர்.

கரூர்:

கரூர் மாவட்டம் தென்னிலை அருகே உள்ள கொளந்தாகவுண்டனூரில் உள்ள ஆளில்லாத தோட்டத்து வீட்டில் இன்று காலை ஒரு வாலிபரும், ஒரு இளம்பெண்ணும் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினர்.

இதனைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக தென்னிலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர்கள் யார்? எப்படி இறந்தனர் என்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் 2பேரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. மேலும் அவர்களது பெயர் விவரம் குறித்து விசாரிக்கும் போது , திருச்சி மாவட்டம் மணப்பாறை சேத்துப்பட்டுவை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (வயது 26), ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஏமலூர் பகுதியை சேர்ந்த சேகர் மனைவி ராஜாமணி (27) என்பது தெரியவந்தது.

ராஜாமணி தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு பாலசுப்பிரமணியனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதையறிந்த உறவினர்கள் 2பேரையும் கண்டித்துள்ளனர். இருப்பினும் அவர்கள் தங்களது கள்ளக்காதலை கைவிடவில்லை.

உறவினர்கள் தொடர்ந்து கண்டித்ததையடுத்து தென்னிலைக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்தது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News