செய்திகள்

திருச்சியில் மாணவியிடம் செக்ஸ் சில்மிஷம்: பெயிண்டர்கள் கைது

Published On 2016-10-21 12:38 GMT   |   Update On 2016-10-21 12:38 GMT
திருச்சியில் மாணவியிடம் செக்ஸ் சில்மிஷம் செய்த பெயிண்டர்களை போலீசார் கைது செய்து ஜே.எம்.6 கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
திருச்சி:

திருச்சி ஏர்போர்ட் சத்யா நகரை சேர்ந்தவர்  லீனா (வயது 16, பெயர் மாற்றப்பட்டுள்ளது அங்குள்ள பள்ளியில் 10-ம்வகுப்பு  படித்து  வருகிறார்.
 சம்பவத்தன்று லீனாவின் தாய் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். பின்னர்  அவர் வீடு திரும்பினார்.

அப்போது  லீனா வெளியே சென்று விட்டு , வீட்டிற்கு வந்தார். அவரிடம் அவரது தாய்  எங்கே சென்று வருகிறாய் என்று கேட்டுள்ளார். அப்போது அவர் அழுதுள்ளார். பின்னர் இது பற்றி விசாரித்த போது  ஏர்போர்ட் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பெயிண்டர்கள்  புருஷோத்தமன் (26), பரந்தாமன் (20) ஆகியோர்  லீனாவிடம்  செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இது குறித்து  ஏர்போர்ட் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து  2 பேரையும் கைது செய்து திருச்சி ஜே.எம்.6 கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

Similar News