செய்திகள்

சிவகிரி அருகே தாய்-மகள் மாயம்

Published On 2016-10-21 12:14 GMT   |   Update On 2016-10-21 12:13 GMT
சிவகிரி அருகே தாய்-மகள் மாயமானாது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை:

நெல்லை மாவட்டம் சிவகிரி அருகே உள்ள மேலகரிசல் கிராமத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல் இவர் கரும்பு வெட்டும் தொழிலாளி. இவரது மனைவி கவுரி (வயது 35). இவர்களுக்கு தனலட்சுமி (8) என்ற மகள் உள்ளார்.

கடந்த 12-ந் தேதி கவுரியும் அவரது மகள் தனலட்சுமியும் கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றவர்கள், மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து கதிர்வேல், சிவகிரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல், திசையன்விளை அருகே உள்ள உவரியைச் சேர்ந்தவர் ராஜசேகர் இவரது மகள் எல்லிஸ்மேரி (வயது 17). இவரை விஜயநாராயணம் அருகே உள்ள சோமநாதபேரி உறவினர்கள் வீட்டில் கடந்த 2 மாதமாக தங்க வைத்து இருந்தனர்.

இந்தநிலையில் கடந்த 18-ந் தேதி வெளியே சென்ற எல்லிஸ்மேரி வீடு திரும்பவில்லை. இதுகுறித்து சோமநாதபுரத்தைச் சேர்ந்த அன்புஹன்சி விஜயநாராயணம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News