செய்திகள்
கோவை: பேராசிரியையை பலாத்காரம் செய்து கொன்ற குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை
கோவை அருகே பேராசிரியையை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளிக்கு மகளிர் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்துள்ளது.
கோவை:
மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை ஆசிரியர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ரம்யா. இவர் ஒரு தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் மர்மமான முறையில் அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் கிடந்தார். அவரது தாயும் தாக்கப்பட்டு, மயங்கிய நிலையில் கிடந்தார்.
இது குறித்து காரமடை போலீசார் வழக்குபதிவு செய்து திருநெல்வேலி மாவட்டம் தென்காசியைச் சேர்ந்த மகேஷ் என்ற வாலிபரை கைது செய்தனர். அவர் மீது 5 பிரிவுகளில் குற்றச்சாட்டு பதிவு செய்து கோவை மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுதவிர அவர் மீது பல கொலை கொள்ளை வழக்குகள் இருந்ததால் அவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், பேராசிரியை கொலை வழக்கு தொடர்பான விசாரணை முடிவடைந்து, மகேஷ் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு தூக்குத் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை ஆசிரியர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ரம்யா. இவர் ஒரு தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் மர்மமான முறையில் அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் கிடந்தார். அவரது தாயும் தாக்கப்பட்டு, மயங்கிய நிலையில் கிடந்தார்.
இது குறித்து காரமடை போலீசார் வழக்குபதிவு செய்து திருநெல்வேலி மாவட்டம் தென்காசியைச் சேர்ந்த மகேஷ் என்ற வாலிபரை கைது செய்தனர். அவர் மீது 5 பிரிவுகளில் குற்றச்சாட்டு பதிவு செய்து கோவை மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுதவிர அவர் மீது பல கொலை கொள்ளை வழக்குகள் இருந்ததால் அவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், பேராசிரியை கொலை வழக்கு தொடர்பான விசாரணை முடிவடைந்து, மகேஷ் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு தூக்குத் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.