செய்திகள்
மீஞ்சூரில் மாணவியிடம் செக்ஸ் சில்மிஷம்: வாலிபர் கைது
மீஞ்சூரில் மாணவியிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பொன்னேரி:
மீஞ்சூர் அத்திப்பட்டு ஜெகதீசன் தெருவை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி (27). தனியார் நிறுவன ஊழியர். இவரது வீட்டிற்கு எதிரே 8-ம் வகுப்பு மாணவி (14) வசித்து வந்தார். எதிர்வீடு என்பதால் மாணவிக்கும் விநாயகமூர்த்திக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று விநாயகமூர்த்தி நைசாக மாணவி வீட்டிற்குள் சென்றார். அங்கு இருந்த மாணவியின் வாயை பொத்தி செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டார். உடனே மாணவி அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து மாணவியை காப்பாற்றினார்கள்.
பின்னர் விநாயகமூர்த்திக்கு தர்ம அடி கொடுத்து பொன்னேரி அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் கீதாலட்சமி விசாரணை நடத்தி விநாயமூர்த்தியை கைது செய்தார்.
மீஞ்சூர் அத்திப்பட்டு ஜெகதீசன் தெருவை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி (27). தனியார் நிறுவன ஊழியர். இவரது வீட்டிற்கு எதிரே 8-ம் வகுப்பு மாணவி (14) வசித்து வந்தார். எதிர்வீடு என்பதால் மாணவிக்கும் விநாயகமூர்த்திக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று விநாயகமூர்த்தி நைசாக மாணவி வீட்டிற்குள் சென்றார். அங்கு இருந்த மாணவியின் வாயை பொத்தி செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டார். உடனே மாணவி அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து மாணவியை காப்பாற்றினார்கள்.
பின்னர் விநாயகமூர்த்திக்கு தர்ம அடி கொடுத்து பொன்னேரி அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் கீதாலட்சமி விசாரணை நடத்தி விநாயமூர்த்தியை கைது செய்தார்.