செய்திகள்

காந்தி ஜெயந்தி: டாஸ்மாக் கடைகளுக்கு 2-ந்தேதி விடுமுறை

Published On 2016-09-28 03:39 GMT   |   Update On 2016-09-28 03:40 GMT
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் அனைத்தும் 2-ந்தேதி கண்டிப்பாக மூடப்பட்டு இருக்க வேண்டும் என்று சென்னை கலெக்டர் அறிவித்துள்ளார்.
சென்னை :

சென்னை மாவட்ட கலெக்டர் பா.மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அக்டோபர் 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மதுபானம் சில்லரை விற்பனை விதிகள், தமிழ்நாடு மதுபான விதிகள் ஆகியவற்றின் கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து ‘டாஸ்மாக்’ மதுபான சில்லரை விற்பனை கடைகள் மற்றும் அதனை சார்ந்த பார்கள், எப்.எல்.-2 உரிமம் கொண்ட கிளப்புகளை சார்ந்த பார்கள், எப்.எல்.-3 உரிமம் கொண்ட ஓட்டல்களை சார்ந்த பார்கள் மற்றும் எப்.எல்.-3(ஏ) உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு இருக்க வேண்டும்.

அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. தவறினால் மதுபான விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

Similar News