செய்திகள்

குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் லாரி மோதி வாலிபர் பலி

Published On 2016-09-27 12:21 GMT   |   Update On 2016-09-27 12:21 GMT
குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் லாரி மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குன்னூர்:

குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் பர்லியார் அருகே நேற்று இரவு 7 மணிக்கு மோட்டார் சைக்கிளில் ஒரு வாலிபர் சென்று கொண்டிருந்தார். பர்லியார் போலீஸ் சோதனைச்சாவடி அருகே உள்ள பாலத்தில் எதிரே வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டத்தில் சம்பவ இடத்திலேயே மோட்டார் சைக்கிளின் வந்த வாலிபர் உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் வெலிங்டன் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த வாலிபரின் ஓட்டுனர் உரிமம் இருந்தது. அதில் முத்துக்குமார், தந்தை பெயர் சுந்தரம், ஒண்டிப்புதூர், கோவை என்ற முகவரி இருந்தது. இதை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது குறித்து போலீசார் கூறுகையில், பர்லியார் போலீஸ் சோதனைச்சாவடி அருகே லாரி மோதி இறந்த வாலிபருக்கு சுமார் 28 வயது இருக்கும். அவர் யார் என்று உடனடியாக தெரிய வில்லை. அவருடைய ஓட்டுனர் உரிமத்தை வைத்து விசாரணை நடத்தி வருகிறோம்.

விசாரணைக்கு பின்னரே இறந்தது யார்? என்ற முழுவிவரம் தெரியவரும் என்றனர். தொடர்ந்து போலீசார் அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Similar News