செய்திகள்
வந்தவாசி அருகே கோஷ்டி மோதல்: 8 பேர் மீது வழக்கு
வந்தவாசி அருகே இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இது குறித்து வந்தவாகி போலீசார் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வந்தவாசி:
வந்தவாசி தாலுகா பையூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் படவேட்டான் (வயது 56), ராஜேந்திரன் (51). இருவரும் உறவினர்கள். இவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜேந்திரனின் உறவினர் கோபால் என்பவர் இறந்து விட்டதால் அவரது இறுதிச் சடங்கில் படவேட்டான் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். அப்போது இரு தரப்பினருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.
இது குறித்து வந்தவாசி வடக்கு போலீசில் இருதரப்பினரும் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் இருதரப்பையும் சேர்ந்த 8 பேர் மீது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆசைத்தம்பி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.