செய்திகள்

பழங்காநத்தத்தில் வியாபாரிக்கு கத்திக்குத்து: ரவுடி கைது

Published On 2016-09-25 15:00 GMT   |   Update On 2016-09-25 15:00 GMT
பழங்காநத்தத்தில் வியாபாரியை கத்தியால் குத்தியதாக ரவுடி கைது செய்யப்பட்டார்.

மதுரை:

மதுரை பழங்காநத்தம் பசும்பொன் நகரை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது34). இவர் அந்த பகுதியில் இட்லி கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நேற்று முத்துப்பட்டியை சேர்ந்த ரவுடி பையா கார்த்திக் (24) வந்துள்ளார்.

அவர், முத்துக்குமாரிடம் மது அருந்த பணம் வேண்டும், எனக்கு மாமூல் தா... என கேட்டாராம். ஆனால் முத்துக்குமார் பணம் கொடுக்க மறுத்தார்.

இதனால் ஆத்திரமடைந்த ரவுடி கார்த்திக் தான் வைத்திருந்த கத்தியால் முத்துக்குமாரை குத்தினார். இதில் அவர் காயம் அடைந்தார். மேலும் அவர் பையில் வைத்திருந்த செல்போனும் சேதம் அடைந்தது.

இது குறித்து சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவுடி பையா கார்த்திக்கை கைது செய்தனர்.

Similar News