செய்திகள்

முதல்வர் ஜெயலலிதா விரைவில் வீடு திரும்புவார்: அப்பல்லோ மருத்துவர்கள் தகவல்

Published On 2016-09-25 14:01 GMT   |   Update On 2016-09-26 01:33 GMT
தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் வீடு திரும்புவார் என்று அப்பல்லோ மருத்துவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.
சென்னை:

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த வியாழக்கிழமை இரவு உடல்நலக்குறைவால் (காய்ச்சல்) அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு அப்பல்லோ மருத்துவக்குழு சிகிச்சை அளித்து 24 மணி நேரமும் கண்காணித்து வந்தது.

அதன்பிறகு ஜெயலலிதாவின் காய்ச்சல் முழுவதுமாக குணமடைந்து விட்டதாக அப்பல்லோ மருத்துவமனையின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டது. இந்நிலையில் இன்று அந்த மருத்துவமனையின் மருத்துவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார்கள். அப்போது ‘‘முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்து இன்னும் சில தினங்களில் விரைவாக வீடு திரும்புவார்.

சிகிச்சைக்காக வெளிநாடு செல்வார் என்ற தகவல் தவறானது. அவர் நலமாக உள்ளார். அவருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் வெளிநாடு செல்ல வேண்டிய அவசியம் கிடையாது’’ என்று கூறினார்கள்.

Similar News