செய்திகள்

சென்னை ஐகோர்ட்டுக்கு விரைவில் 15 புதிய நீதிபதிகள் நியமனம்

Published On 2016-09-24 22:25 GMT   |   Update On 2016-09-24 22:25 GMT
சென்னை ஐகோர்ட்டுக்கு 15 புதிய நீதிபதிகள் விரைவில் நியமிக்கப்படவுள்ளனர்.
சென்னை:

சென்னை ஐகோர்ட்டின் நீதிபதி பணியிடங்கள் 75 ஆகும். தற்போது 39 நீதிபதிகள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் 30 பேரின் பெயர், நீதிபதி பதவிக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அவர்களில் 11 பேர் வக்கீல்கள், 19 பேர் மாவட்ட நீதிபதிகள். இந்த 30 பேரில் 15 பேர் விரைவில் நியமிக்கப்படவுள்ளனர்.

இந்த 15 பேரில், ஆர்.பார்த்திபன் (சென்னை), ஆர்.சுப்பிரமணியன் (சென்னை), கோவிந்தராஜ் (புதுச்சேரி), எம்.சுந்தர் (சென்னை), ஆர்.சுரேஷ்குமார் (சென்னை), நிஷாபானு (மதுரை ஐகோர்ட்டு கிளை), எம்.எஸ்.ரமேஷ் (அரசு வக்கீல், சென்னை), எஸ்.எம்.சுப்பிரமணியம் (சென்னை), அனிதா சுமந்த் (அரசு வக்கீல், சென்னை) ஆகிய 9 பேர் வக்கீல்கள். எஸ்.பாஸ்கர், ஏ.எம்.பஷீர் அகமது, ஜி.ஜெயச்சந்திரன் (சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டு), சி.வி.கார்த்திகேயன், டீக்காராமன், என்.சேஷாயி ஆகிய 6 பேர் மாவட்ட நீதிபதிகள். இவர்கள் நியமனம் தொடர்பான ஆணை இந்த வாரத்தில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News