செய்திகள்

கொருக்குப்பேட்டையில் வியாபாரி வீட்டில் நகை திருடிய வேலைக்கார பெண் கைது

Published On 2016-09-24 08:49 GMT   |   Update On 2016-09-24 08:49 GMT
கொருக்குப்பேட்டையில் வியாபாரி வீட்டில் நகை திருடிய வேலைக்கார பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
ராயுபுரம்:

கொருக்குப்பேட்டை கன்னிகோவில் தெருவை சேர்ந்தவர் மணிசங்கர். இவர் பிராட்வேயில் இரும்பு கடை நடத்தி வருகிறார்.

இவரது வீட்டில் சேலையூரை சேர்ந்த சுபாகனி (30) என்பவர் வீட்டு வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று மணிசங்கர் வீட்டில் இருந்த பீரோவை திறந்து பார்த்தார். அப்போது அருகில் இருந்த 38 பவுன் மாயமாகி இருந்தது.

இது குறித்து மணிசங்கர் கொருக்குப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சுபாகனியை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் சுபாகனி மணிசங்கர் வீட்டில் 38 பவுன் நகையை கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டார். இதைத் தொடர்ந்து போலீசார் சுபாகனியை கைது செய்தனர்.

Similar News