செய்திகள்

காக்கிநாடா மற்றும் கச்சுகுடா எக்ஸ்பிரஸ் ரெயில்கள் செங்கல்பட்டு வரை நீட்டிப்பு: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

Published On 2016-09-24 02:54 GMT   |   Update On 2016-09-24 02:54 GMT
காக்கிநாடா மற்றும் கச்சுகுடா எக்ஸ்பிரஸ் ரெயில்கள் செங்கல்பட்டு வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
சென்னை:

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

காக்கிநாடா துறைமுகம்-சென்னை எழும்பூர்-காக்கிநாடா துறைமுகம் செல்லும் சர்கார் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் (வ.எண்.17643, 17644), கச்சுகுடா-சென்னை எழும்பூர்-கச்சுகுடா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களும் (17651, 17652) அடுத்த மாதம் (அக்டோபர்) 1-ந்தேதி முதல் செங்கல்பட்டு வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளன.

30-ந்தேதியில் இருந்து காக்கிநாடா துறைமுகத்தில் இருந்து புறப்படும் சர்கார் எக்ஸ்பிரஸ் ரெயிலும்(17644), கச்சுகுடாவில் இருந்து வருகிற 30-ந்தேதி புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலும்(17652) செங்கல்பட்டு வரை முதல் சேவையில் பயணிக்கிறது. அதேபோல், வருகிற 1-ந்தேதி முதல் செங்கல்பட்டில் இருந்து புறப்பட்டு கச்சுகுடாவுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும்(17651), செங்கல்பட்டில் இருந்து காக்கிநாடா துறைமுகத்துக்கு செல்லும் சர்கார் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (17643) முதல் சேவையில் பயணிக்கிறது.

இந்த ரெயில்கள் சென்னை எழும்பூர்-செங்கல்பட்டு இடையே மாம்பலம், தாம்பரம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News