செய்திகள்

தூத்துக்குடியில் வியாபாரி மீது தாக்குதல்: போலீசார் விசாரணை

Published On 2016-09-22 11:08 GMT   |   Update On 2016-09-22 11:09 GMT
தூத்துக்குடியில் முன்விரோதம் காரணமாக வியாபாரி மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி தாளமுத்து நகரை சேர்ந்தவர் அந்தோணி. இவர் அப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலுவை ராஜ் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் சிலுவை ராஜின் உறவினர் ஞானசேகர் அவரது மகன்கள் ரமேஷ், ஜோசுவா, ரூபன் ஆகியோர் சேர்ந்து அந்தோணியை சரமாரியாக தாக்கினர்.

இதுகுறித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஞானசேகர் உள்பட 4 பேரை தேடி வருகின்றனர்.

Similar News