செய்திகள்

கோவை அருகே 4 நாட்களுக்கு முன்பு மாயமான தொழிலாளி மரணம்

Published On 2016-09-07 11:25 GMT   |   Update On 2016-09-07 11:25 GMT
4 நாட்களுக்கு முன்பு மாயமான தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை:

கோவை காந்திமா நகரை சேர்ந்தவர் ஆரோக்கிய சாமி (வயது 58). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வேலைக்கு சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.இதனால் அவரது மனைவி, பல இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் காணவில்லை.

இதற்கிடையே ஆரோக்கியசாமியை பற்றி அவருடன் வேலை பார்த்த சிலரும் விசாரித்தார். அப்போது ஆரோக்கியசாமி, வேலை செய்யும் போது மயங்கி விழுந்ததாகவும், போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்ந்ததாகவும் தெரிவித்தனர்.இதனால் காந்திபுரம் போலீஸ் நிலையத்தில் ஆரோக்கிய சாமி மனைவி புகார் செய்தார். போலீசார் விசாரணையில் ஆரோக்கியசாமி மயங்கி விழுந்ததால் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட விவரத்தை தெரிவித்தனர்.

பின்னர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்த போது அங்கு ஆரோக்கியசாமி சிகிச்சை பலனின்றி இறந்தது தெரிய வந்தது. அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டு இருந்தது.

ஆரோக்கியசாமியின் உடலை கண்டு அவரது மனைவி கதறி அழுததை கண்டு அங்கிருந்தவர்கள் பரிதாபப்பட்டனர்.

Similar News