செய்திகள்
தர்மபுரி அருகே கட்டிட மேஸ்திரி தூக்குபோட்டு தற்கொலை
தர்மபுரி அருகே கட்டிட மேஸ்திரி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏரியூர்:
தர்மபுரி மாவட்டம் பெரும்பாலை அருகே உள்ள வரகுஊரான் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் பெரியமராத்தான். இவரது மகன் ஆறுமுகம் (வயது 19). கட்டிட மேஸ்திரி. இவருக்கு திருமணம் செய்து வைப்பதற்காக அவரது பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் பெண் பார்த்துள்ளனர்.
எங்கு தேடியும் பெண் கிடைக்காததால் விரக்தி அடைந்த ஆறுமுகம் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஏரியூர் இன்ஸ்பெக்டர் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.