செய்திகள்

நெல்லை அருகே வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

Published On 2016-09-07 06:10 GMT   |   Update On 2016-09-07 06:10 GMT
திருநெல்வேலி கரிவலம்வந்தநல்லூர் அருகே தந்தை இறந்த துக்கத்தில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்
சங்கரன்கோவில்:

கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள வீரணாபுரத்தை சேர்ந்தவர் ராமர் மகன் முத்துக்குமார் (வயது 32). இவருக்கு திருமணமாகி 3வருடம் ஆகிறது. குடும்பத்துடன் மும்பையில் தங்கி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவரின் தந்தை ராமர் கடந்த வாரம் உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டாராம். அதற்காக சொந்த ஊருக்கு வந்த முத்துக்குமார் மிகுந்த சோகத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

தந்தை மீது மிகுந்த பாசத்தில் இருந்த முத்துக்குமார் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பற்றி முத்துக்குமாரின் தாயார் லெட்சுமி கொடுத்த புகாரின் பேரில் கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News