செய்திகள்

மூளைச்சாவு அடைந்தும் ஆறு பேருக்கு மறுவாழ்வு அளித்த திருப்பூர் பொறியாளர்

Published On 2016-08-30 10:03 GMT   |   Update On 2016-08-30 10:03 GMT
மூளைச்சாவு அடைந்த 21 வயது இளம் பொறியாளரால் ஆறு பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.
கோயம்புத்தூர்:

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியைச் சேர்ந்த யுவராஜ்(21) கடந்த மார்ச் மாதம் நடந்த விபத்தில் தனது சுயநினைவை இழந்தார்.

தொடர்ந்து சிகிச்சை அளித்தும் யுவராஜுக்கு நினைவு திரும்பாத நிலையில் கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் கடந்த 26-ம் தேதி பெற்றோர்கள் அவரை மேல்சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

ஆனால் மருத்துவ சிகிச்சைகளுக்கு அவரது உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. இந்நிலையில் நேற்று மாலை யுவராஜ் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

யுவராஜ் மரணமடைந்தாலும் அவரது உள்ளுறுப்புகளை பெற்றோர் தானம் செய்தனர். அதன்படி அவரது கண்கள், சிறுநீரகங்கள், கல்லீரல் மற்றும் இதயம் ஆகியவை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு பத்திரப்படுத்தப்பட்டது. அவரது ஒரு சிறுநீரகம் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிக்கும், மற்றொரு சிறுநீரகம் கே.ஜி. மருத்துவமனையில் உள்ள நோயாளிக்கும் பொருத்தப்பட்டது.

கல்லீரல் பி.எஸ்.ஜி. மருத்துவமனைக்கும், இதயம் ஜி.கே.என்.எம். மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. கண்கள் சங்கரா கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் மூலம் மரணத்திற்குப் பிறகும் யுவராஜ் 6 பேருக்கு மறுவாழ்வு அளித்திருக்கிறார்.


Similar News