செய்திகள்

தூத்துக்குடியில் 6 ரவுடிகள் கைது

Published On 2016-08-08 17:40 GMT   |   Update On 2016-08-08 17:40 GMT
தூத்துக்குடியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிக் கொண்டிருந்த 6 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி பாரதிநகரை சேர்ந்தவர் கபில் (வயது 23), இவர் மீதும், இவரது  கூட்டாளிகள் அறிவழகன் (23), மாரிச்செல்வம் (22), இலங்காமணி (37), சுடலைமணி (26), தங்கமுருகன் (27) ஆகியோர் மீதும் தூத்துக்குடி போலீஸ் நிலையங்களில் கொள்ளை, கொலை முயற்சி உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் உள்ளன.

இந்நிலையில் நேற்று இரவு தூத்துக்குடி முத்தையாபுரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மேரி ரோந்து சென்றார். அப்போது அந்த பகுதியில் கபில் மற்றும் அவரது கூட்டாளிகள் ஒன்று சேர்ந்து கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிக் கொண்டிருந்தனர்.  இதைக்கண்ட சப்- இன்ஸ்பெக்டர் மேரி, ரவுடிகள் 6 பேரையும் மடக்கிப்பிடித்து கைது செய்தார்.

Similar News