செய்திகள்

கும்பகோணம் பள்ளி தீ விபத்து: மேல்முறையீட்டு மனுக்கள் மீது 30-ம் தேதி முதல் இறுதி விசாரணை

Published On 2016-06-13 09:59 GMT   |   Update On 2016-06-13 09:59 GMT
கும்பகோணம் பள்ளி தீ விபத்து தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் மீது ஜூன் 30-ம் தேதி முதல் இறுதி விசாரணை நடைபெறும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை:

கும்பகோணம் தனியார் பள்ளியில் கடந்த 2004ம் ஆண்டு நடந்த தீ விபத்தில் 94 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த தஞ்சை மாவட்ட அமர்வு நீதிமன்றம், பள்ளி தாளாளர் பழனிச்சாமி உள்ளிட்ட 10 பேருக்கு தண்டனை வழங்கியது. 11 பேரை விடுவித்தது.

11 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அரசு தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதேபோல் தண்டனை பெற்றவர்களும், தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தனர். இவ்வழக்குகள் மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், இறுதி விசாரணை தொடங்கும் தேதி ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஜூன் 30-ம் தேதி முதல் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான இறுதி விசாரணை நடைபெறும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று அறிவித்துள்ளது. மேலும், அரசு மற்றும் குற்றம் சாட்டப்பட்டோர் சார்பில் எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Similar News